ஹஜ் பெருநாள் 1438: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடைபெற்றது! | ![]() | ![]() |
31 ஆகஸ்ட் 2017 மாலை 12:25 | |||
ஹிஜ்ரீ கமிட்டி – காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:- ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இன்று காயல்பட்டித்தில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை. மௌலவி முஹம்மது மீரான் தாவூதி அவர்கள் பெருநாள் உரையாற்றினார். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... பிறைகளை நாட்காட்டியாக அல்லாஹ் படைத்துள்ளான் (2:189). சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின்படியே அமைந்துள்ளன (55:5). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இத்தகைய குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவ்வருடத்தின் அரஃபாநாள் புதன்கிழமை (30-08-2017), ஹஜ்ஜூப் பெருநாள் வியாழக்கிழமை (31-08-2017) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன. இதன் அடிப்படையில் பெருநாள் தினமான வியாழக்கிழமை (31-08-2017) இன்று இறைவனைப் புகழ்ந்து, ஏழைகளுக்கு உணவளித்து தியாகத் திருநாள் என்னும் ஹஜ்ஜூப் பெருநாளை ஹிஜ்ரி கமிட்டியினர் அனைவரும் சேர்ந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் சரியான தினத்தில் சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் இன்று காலை 7:40 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அல்ஹாஃபிழ் முஃபீஸூர் ரஹ்மான் அவர்கள் தொழுகையை வழி நடத்தினார். மௌலவி முஹம்மது மீரான் தாவூதி அவர் பெருநாள் குத்பா உரையாற்றினார். நூற்றுக்கும் அதிகமானோர் தொழுகையில் பங்கேற்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்: ஹிஜ்ரீ கமிட்டி சார்பாக...
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |