‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு!! | ![]() | ![]() |
05 டிசம்பர் 2017 காலை 10:08 |
‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு!!
எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, ‘பதியம்’ என்னும் பெயரில், சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியது. அதன் முதலாவது முயற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, ‘பதியம்’ தளம் மூலம் - காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் தனி பிரிவாக செயல்படும் கண்ணும்மா முற்றம், குழந்தைகளிடம் - இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.
‘பதியம்’ – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!
காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் இணைவில், கண்ணும்மா முற்றம் பிரிவின் ஒரு புதிய செயல்திட்டமாக, ‘பதியம்’ என்னும் பெயரில் சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டுவதே, ‘பதியம்’ தளத்தின் நோக்கமாகும்!
அவ்வகையில், தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
‘கதை வண்டி’ – சிறார்களுக்காக சிறார்களே கதை எழுதும் முயற்சி!
தமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம். இதனை சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான திரு விழியன், திரு விஷ்ணுபுரம் சரவணன் & திரு வெற்றிச்செழியன் மற்றும் ஓவியர் திருமதி வித்யா ஆகியோர் அடங்கிய குழுமம், தமிழக அளவில் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உள்ளது.
தமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் ஒரு சில சிறார்களை தேர்ந்தெடுத்து, அவர்களுடன் நேரிலும், அஞ்சல் & தொலைபேசி வழியாகவும், கதை வண்டி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு - ஒரு வருட காலம் பயணிக்க இருக்கிறார்கள். அதன் வாயிலாக, சிறார்களுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர அவர்கள் உதவுவர்.
பயணத்தின் முடிவில், ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் அவற்றை வெளியிடவும் இருக்கிறார்கள்.
தேர்வு செயல்முறை
>> வயது: 9 வயது முதல் 14 வயது வரை
>> கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: திங்கள், 25 டிசம்பர் 2017
>> கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
>> ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
>> வார்த்தை வரம்பு ஏதுமில்லை
சிறார்களிடம் இருந்து பெறப்படும் கதைகள் அனைத்தும், ‘பதியம்’ தளம் மூலம் ‘கதை வண்டி’ ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எழுதிய சிறார்களுக்கு (மட்டும்), அடுத்த கட்டப் பயிற்சி குறித்த தகவல் வழங்கப்படும்.
இந்த முதல் முயற்சியைத் தொடர்ந்து, ‘பதியம்’ தளத்தின் இன்ன பிற செயல்பாடுகள் முறையே துவங்கும் (இறைவன் நாடினால்)
கூடுதல் தகவலுக்கு…
கூடுதல் தகவலுக்கு, ஜனாப் முஜீப் (நூலகர், காயல்பட்டினம் அரசு பொது நூலகம்; 9894586729), ஜனாப் கே.எம்.டீ சுலைமான் (துனை செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிக்குலோஷன் மேனிலைப் பள்ளி; 9486655338) & ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் (ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு; 9962841761) ஆகியோரில் ஒருவரை அனுகலாம்.</font>
தகவல் விழியன், வித்யா, விஷ்ணுபுரம் சரவணன் & வெற்றிச்செழியன் ஒருங்கிணைப்புக் குழு – ‘கதை வண்டி’
செய்தியாக்கம் அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |